Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டம் வாங்கி தறேன் வா ராஜா; கடத்தப்பட்ட குழந்தை! – 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (15:42 IST)
பட்டம் வாங்கி தருவதாக கூறி தொழிலதிபர் மகனை கடத்திய கும்பலை 24 மணி நேரத்தில் பெங்களூர் போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு நகரில் உள்ள சிவாஜி நகரை சேர்ந்த தொழிலதிப்ரின் 11 வயது மகன் முகம்மது உமர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் பட்டம் வாங்கி தருவதாக கூறி சிறுவனை கடத்தியுள்ளனர். பிறகு தொழிலதிபருக்கு போன் செய்து 2 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் சிறுவனை விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக இதுகுறித்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் தும்கூர் பகுதியில் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் கடத்திய கும்பலில் ஒருவர் தொழிலதிபருக்கு தெரிந்தவர் என்பதும், திட்டமிட்டு மகனை கடத்தி பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.

சிறுவன் கடத்தப்பட்டு 24 மணி நேரத்தில் போலீஸார் மீட்ட நிலையில் காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments