Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பண்ணியிருப்பார்.. மாணவி வன்கொடுமையில் சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்!

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (10:41 IST)

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டது கவனத்தை ஈர்ப்பதற்காக என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

 

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இந்த செயல் குறித்து பலர் ஆதரவாக பேசி வரும் நிலையில், பலர் கேலியும் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “அவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இதுபோன்ற ஸ்டண்ட்களில் ஈடுபடுகிறார் என்றே நான் கருதுகிறேன்” என கூறியுள்ளார்.

 

மேலும் “அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான நபர் அல்லாது வேறு ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக கூறுகிறார்கள். அந்த நபர் யார் என்பதை கண்டறிய வேண்டும். காவல்துறை விசாரித்தால் எதுவும் சரியாக இருக்காது. சிபிஐ விசாரித்தால்தான் தெளிவான தகவல்கள் தெரிய வரும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments