Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பண்ணியிருப்பார்.. மாணவி வன்கொடுமையில் சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்!

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (10:41 IST)

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டது கவனத்தை ஈர்ப்பதற்காக என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

 

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இந்த செயல் குறித்து பலர் ஆதரவாக பேசி வரும் நிலையில், பலர் கேலியும் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “அவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இதுபோன்ற ஸ்டண்ட்களில் ஈடுபடுகிறார் என்றே நான் கருதுகிறேன்” என கூறியுள்ளார்.

 

மேலும் “அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான நபர் அல்லாது வேறு ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக கூறுகிறார்கள். அந்த நபர் யார் என்பதை கண்டறிய வேண்டும். காவல்துறை விசாரித்தால் எதுவும் சரியாக இருக்காது. சிபிஐ விசாரித்தால்தான் தெளிவான தகவல்கள் தெரிய வரும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments