Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் சொன்னது போல் நான் பொறுக்கி தான்: அண்ணாமலை

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (08:23 IST)
அமைச்சர் தா.மோ தாமோதரன் சொன்னதுபோல் நான் பொறுக்கிதான் என நெல்லை மாவட்டத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்கள் 'அண்ணாமலை ஒரு பொறுக்கி என்றும் ஐபிஎஸ் ஆக இருந்தபோது ரவுடிகளை சிறையில் அடைத்தவர் தற்போது ரவுடிகளை தனது கட்சியில் சேர்த்து வருவதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்கள் கூறியது போல் நான் பொறுக்கி தான் என்றும் அமைச்சர் கூறியிருப்பதை நான் ஏற்று கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
 
ஆனால் எப்படிப்பட்ட பொறுக்கி என்றால் திமுகவின் ஊழலை பொறுக்கி, திமுகவின் வன்முறையை பொறுக்கி, திமுகவின் அராஜகத்தை பொறுக்கி, ஒரு சாதாரண மனிதனாக பொறுக்கி பொறுக்கி எடுத்து வந்து மக்கள் மன்றத்தில் வைத்து கொண்டிருக்கின்றேன். அதற்காக எனக்கு பொறுக்கி என்ற பட்டம் கொடுத்தால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments