Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை மாட்டிய அண்ணாமலை!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (11:45 IST)
ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மாட்டிய அண்ணாமலையால்  அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

 
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்திருந்தார். அதன் ஒரு பகுதியாக கோல்டு வின்ஸ், துரைசாமி நகரில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் ரேஷன் கார்டுதார்களுக்கு மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். 
 
அப்போது ரேஷன் கடையின் உள்ளே சென்ற அண்ணாமலை அங்கு முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அருகில் பிரதமர் மோதியின் படத்தை மாட்டினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்துள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் பிரதமர் மோடியின் படத்தை மாற்றியது சர்ச்சையாகியிருந்தது. அதற்காக அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து பாஜக பிரமுகரை ஆலாந்துறை போலீசார் கைது செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments