Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மோடி, வேண்டும் மோடி: தாமரை சின்னத்தை சுவரில் வரைந்த அண்ணாமலை..

Siva
செவ்வாய், 16 ஜனவரி 2024 (14:40 IST)
மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்பதோடு தாமரை சின்னத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுவரில் வரைந்தார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
 
வரும் பாராளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி 
 அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர, நமது பாஜக தேசியத் தலைவர் திரு 
ஜேபி நட்டா  அவர்கள், "மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முழக்கத்தை, சுவர் விளம்பரங்கள் வாயிலாக முன்னெடுத்தார். 
 
அதன் தொடர்ச்சியாக, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி, காளப்பட்டி ஒன்றியம், 408வது பூத்திற்கு உட்பட்ட பகுதியில், தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் திரு முருகானந்தம் , கோவை மாநகர் மாவட்டத் தலைவர் திரு ரமேஷ்க்மார்   மற்றும் பூத் நிர்வாகிகள் முன்னிலையில் சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் ஈடுபட்டோம். தமிழகம் முழுவதும் தமிழக பாஜக  சகோதர சகோதரிகள் சுவர் விளம்பரங்கள் மூலமாக பாராளுமன்றத் தேர்தல் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
 
வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்குடன் பயணிக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும்  பெரிதும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments