Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸுக்கு வேலையில்ல.. விற்காத மென்பொருளில் ஒட்டுக்கேட்பா! – பாஜக அண்ணாமலை ஆவேசம்!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 29 ஜூலை 2021 (12:12 IST)
பெகாசஸ் உளவு விவகாரம் குறித்த அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் குறித்து பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் வழியாக இந்திய அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களை அரசு ஒட்டுகேட்டதாக வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து மக்களவை, மாரிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “காங்கிரஸ் ஒரு வேலையில்லாத கட்சி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாராளுமன்றத்தில் பெகாசஸ் என்ற நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். விற்காத மென்பொருளை வைத்து எப்படி உளவு பார்க்க முடியும்?” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8வது நாளாக முடங்கிய மத்திய மற்றும் மாநிலங்களவை !