Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேருக்கு நேர் எதிர்பாராமல் சந்தித்த அண்ணாமலை - சசிகலா.. அதன்பின் என்ன நடந்தது?

Mahendran
புதன், 14 பிப்ரவரி 2024 (14:04 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சசிகலா ஆகிய இருவரும் எதிர்பாராமல் நேருக்கு நேர் சந்தித்த நிலையில் சசிகலா தனது அருகில் அண்ணாமலைக்கு உட்கார இடம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி காலமானதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது வீட்டிற்கு இரங்கல் தெரிவிக்க சென்றார். அப்போது அதே இடத்திற்கு சசிகலாவும் வந்திருக்க இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டனர். 
 
அப்போது அண்ணாமலை சசிகலாவுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவிக்க சசிகலாவும் தனது அருகில் அவருக்கு உட்கார இடம் கொடுத்தார். இருவரும் சில நிமிடங்கள் அருகருகே உட்கார்ந்து இருந்த போதிலும் எதுவும் பேசிக் கொண்டதாக தெரியவில்லை. 
 
துக்க வீட்டில் அரசியல் பேசுவது நாகரீகம் இல்லை என்பதால் இருவரும் பேசாமல் உட்கார்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அண்ணாமலையை பார்த்தவுடன் தனது அருகில் உட்கார சசிகலா இடம் கொடுத்தது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments