ஐயப்பனை வைத்து கேரள அரசு பிக்பாக்கெட் செய்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு..!

Mahendran
செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (11:19 IST)
கேரள அரசு சபரிமலையை வைத்து பக்தர்களை ஏமாற்றுவதாகவும், இது ஒருவிதமான 'பிக்-பாக்கெட்' செயல் என்றும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்
 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 2024-25 நிதியாண்டில் மட்டும் பக்தர்கள் ₹421 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளிலும் தலா ₹350 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. இருந்தும், சபரிமலை மேம்பாட்டுப் பணிகளுக்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கு ₹1,000 கோடி ஒதுக்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் பெரும் வருமானம் வரும் நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிதி ஒதுக்குவதாகக் கூறுவது, பக்தர்களின் உணர்வுகளைச் சுரண்டுவதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.
 
கடவுள் நம்பிக்கை இல்லாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் பினராயி விஜயன், அரசியல் ஆதாயத்துக்காக ஐயப்ப பக்தர்கள் மாநாட்டை நடத்துவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
 
மேலும், சனாதனத்திற்கு எதிராக பேசும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலாக இரண்டு தமிழக அமைச்சர்கள் மாநாட்டுக்கு சென்றதை அவர் விமர்சித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்தது உண்மைதான்: அண்ணாமலை பேட்டி..!

இரண்டாவது நாளாக சரியும் பங்குச்சந்தை.. H1B விசா விவகாரம் காரணமா?

2047ஆம் ஆண்டு வரை மோடி தான் பிரதமர் வேட்பாளர்.. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

84,000 ரூபாயை தொட்டுவிட்டது தங்கம்.. விரைவில் ஒரு லட்சம் தான் டார்கெட்டா?

H1B விசா கட்டண உயர்வு.. திடீரென இறங்கி வந்த அமெரிக்கா.. விலக்கு அளிக்க முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments