Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் பளார் பளார் என அறை வாங்கிய அண்ணாமலை: அமைச்சர் சேகர்பாபு

Mahendran
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (12:13 IST)
டெல்லியில் அண்ணாமலை பளார் பளார் என அறை வாங்கி வந்து, இங்கே ஏதாவது பேசுவார். அவருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு பொறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆதிதிராவிட நல விடுதிகளில் உணவு தரம் இல்லை என்று அண்ணாமலை குற்றச்சாட்டு கூறியதை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். "அண்ணாமலை ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார். டெல்லி சென்றார், அங்கு பளார் பளார் என அறை விட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு இங்கே வந்து அதை மறைக்க எதையாவது பேசி தானே ஆகணும்.
 
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் உணவு தரம் இல்லை என்றால், அவர் சொல்வதை ஏற்றுக்கொண்டு ஆய்வு செய்யலாம். அப்படி இருந்தால், நிச்சயமாக வருத்தம் தெரிவித்துக்கொண்டு அந்த குறைகளை சரி செய்ய அரசு தயாராக இருக்கிறது. குறைகளை சொல்லக்கூடாது என்பதல்ல; ஆனால், குறைகள் கூட குற்றச்சாட்டுகளாக மாறும்போதுதான் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது," என்று தெரிவித்தார்.
 
அண்ணாமலை கூறிய கருத்தை ஏற்றுக்கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்படி ஏதாவது குறைகள் இருந்தால், கண்டிப்பாக அவை தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments