Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான ஞானசேகருக்கு மாவுக்கட்டு..!

Siva
வியாழன், 26 டிசம்பர் 2024 (07:00 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், நேற்று ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கீழே விழுந்ததால் இடது கை மற்றும் இடது கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் தனது சக மாணவரிடம் பல்கலை வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென உள்ளே வந்த சில மர்ம நபர்கள் மாணவரை அடித்து விட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், ஞானசேகரன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அந்த பகுதியில் பிரியாணி கடை வைத்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு காலில் மாவு கட்டு போடப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஞானசேகரனை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடியதாகவும், அப்போது கீழே விழுந்ததில் இடது கை மற்றும் இடது கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்