Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது மெஸ் பீஸ் ஆ? அதிர்ச்சியான அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள்!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:18 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மெஸ் கட்டணம் கட்ட சொல்லி கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழகத்தில் எந்த கல்லூரி மற்றும் பள்ளிகளும் நடக்கவில்லை. அதனால் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் வீடுகளுக்கு மெஸ் கட்டணம் கட்ட சொல்லி கடிதம் அனுப்பியதாக நக்கீரன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் இந்த செமஸ்டருக்கான மெஸ் கட்டணம், விடுதிக்கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் என 24,820(சைவம்), 27,820 (அசைவம்) கட்ட சொல்லி கடிதம் அனுப்பியதால் மாணவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். ஏற்கனவே மார்ச் மாதமே விடுதிகளை மூடிவிட்டதால் மீதியுள்ள மாதங்களுக்கான கட்டணமே விடுதி நிர்வாகத்திடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments