Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (12:05 IST)
அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மாண்டஸ் புயல் காரணமாக கடந்த வாரத்தின் சில நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருந்தது. முன்னதாக 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் இருந்த தேர்வு மாண்டஸ் புயல் காரணமாக 24 மற்றும் 31 ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆம், டிசம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்வு ஜனவரி 19 ஆம் தேதியும், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பட்டிருந்த தேர்வு ஜனவரி 20 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையின் காயங்கள் இன்னும் ஆறவில்லை! பாக். சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்க பதிவு!

என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

தெருநாய்களை அப்புறப்படுத்த இடைக்கால தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

தூய்மைப் பணியாளர்களுக்கு தனித் திட்டம்! போராட்டத்தை மூடி மறைக்கிறாரா முதல்வர்?

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments