Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்வு எழுதலையா? கவலை வேண்டாம்! – அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (08:59 IST)
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு அண்ணா பல்கலைகழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் அண்ணா பல்கலைகழகம் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தி வருகிறது. செப்டம்பர் 24 தொடங்கி 29ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் 24ம் தேதி தொடங்கிய தேர்வில் 90 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 10 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் அவர்களுக்கு ரிசல்ட் எப்படி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைகழகம் 24ம் தேதி ஆன்லைன் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளது. மேலும் மற்ற நாட்களிலும் ஆன்லைன் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கலந்து கொள்ளாதவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments