Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமன் ஜெயந்தி விழா.! தெப்பக்குளத்தில் ஆறாட்டு வைபவம்.! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

Senthil Velan
வியாழன், 11 ஜனவரி 2024 (09:54 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற  திருவட்டார் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா  கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
 
மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா ஜனவரி 11ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது
 
இந்நிலையில் அனுமன் ஜெயந்தியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற    திருவட்டார் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பஞ்சமூக ஆஞ்சநேயருக்கு தயிர், பால், தேன், சந்தனம், பன்னீர் இளநீர், துளசிநீர், கரும்புசாறு, களபம் உள்ளிட்ட 8 வகை பொருட்களால் அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. 
ALSO READ: லட்சத்தீவு செல்ல குவியும் புக்கிங்: மார்ச் மாதம் வரை விமான டிக்கெட் இல்லை..!
 
தொடர்ந்து பலவகை மலர்களால்  புஷ்பாபிஷேகத்துடன் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் ஆஞ்சநேயருக்கு ஆறாட்டு வைபவம் நடைபெற்றது.  இதில் கேரளா,தமிழகத்திலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments