Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமாரியால் அதிகமாகும் கால்நடைகளின் உயிரிழப்பு… போதிய தடுப்பூசிகள் தராத மத்திய அரசு- கால்நடைத்துறை அமைச்சர்!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (13:35 IST)
மத்திய அரசு வழங்கவேண்டிய கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசியை இந்த ஆண்டு முழுமையாக வழங்கவில்லை என கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வழக்கத்தை விட தமிழகத்தில் கால்நடைகள் கோமாரி நோய் தாக்கி அதிகளவில் உயிரிழந்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில் ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 120 க்கும் மேற்பட்ட ஆடு மாடுகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியபோது ‘ஆண்டுதோறும் மத்திய அரசு தமிழகத்துக்கு 90 லட்சம் கோமாரி தடுப்பூசிகள் வழங்கவேண்டும். ஆனால் இந்த ஆண்டு 20 லட்சம் தான் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசி போடமுடியவில்லை. இதன் காரணமாக உயிரிழப்பு அதிகமாகியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments