Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை.. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பு..!

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை.. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பு..!
, ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (08:03 IST)
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று உடல் நல குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தர்மபுரி சென்று கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டார். 
 
அதனை அடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அன்பில் மகேஷ் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இருப்பினும் 24 மணி நேரமும் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்குநேரியில் 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு..மீண்டும் ஒரு அசம்பாவிதம்..!