Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு உத்தரவால் தமிழகத்திலும் ஹீரோ ஆன ஜெகன் மோகன் ரெட்டி

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (17:30 IST)
ஆந்திராவில் புதிதாக ஆட்சியமைத்த ஜெகன் மோகன் ரெட்டி தமிழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருப்பது தமிழக மக்களுக்கு ஜெகன் மோகன் மீது மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

பாலாறு குறுக்கே அணை கட்டும் விவகாரம் தொடர்பாகவும், கிருஷ்ணா நதிநீர் திறந்துவிட கோரியும் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திராவுக்கே சென்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் வலியிறுத்தினர்.

அதை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு 8 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். இந்த அளவானது கர்நாடகா காவிரிக்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவான 9 டி.எம்.சிக்கு ஒரு டி.எம்.சி அளவு குறைவானதாகும்.

ஆந்திராவில் புரட்சிகரமான பல முடிவுகளை எடுத்து மக்களை கவர்ந்த ஜெகன் மோகன் இந்த முறை தனது முடிவால் தமிழக மக்களின் மதிப்பையும் பெற்றுள்ளார். இந்த உடனடி முடிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments