Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநரும்,அரசும் இணைந்து செயல்படவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Webdunia
ஞாயிறு, 6 நவம்பர் 2022 (15:23 IST)
ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட்டு தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசுக்கும் ஆளுனருக்கும்  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களை ஆளுனர் கிடப்பில் போடுவதாகவும், சனாதன தர்மம் குறித்த ஆளுனரின் கருத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருவதாகவும் தெரிகிறது 
 
இந்த நிலையில் முதலமைச்சர் ஆளுநரை சந்தித்து பேசி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஆளுநர் அனைத்து உதவிகளையும் செய்து மாநிலத்திற்கு முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வேண்டுமென்றே ஆளுநர் எதிர்க்கக் கூடாது என்றும் இதனை இருவருமே கடைபிடிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
இதனை அடுத்து  முதல்வர் மற்றும் கவர்னர்  சந்திப்பு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments