Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றுப் பத்திரத்தில் கூட கையெழுத்து போட தயாராக இருந்தோம்: அன்புமணி ராமதாஸ்

Siva
வியாழன், 4 ஏப்ரல் 2024 (13:35 IST)
நாங்கள் கூட்டணியில் இணைகிறோம், எங்களுக்கு தொகுதிகள் கூட வேண்டாம், எங்களது மக்களுக்கு இட ஒதுக்கீடுமட்டும் கொடுங்கள் போதும், அதற்காக நாங்கள் வெற்று பாத்திரத்தில் கூட கையெழுத்து போட தயாராக இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 
 
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தர்மபுரியில் அவரது மனைவி சௌமியா அன்புமணிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
எடப்பாடி பழனிசாமி நம்மைப் பார்த்து துரோகி என்கிறார். யார் துரோகி என்பது உங்களுக்கே தெரியும். அவரை வழிநடத்திய அனைவருக்கும் துரோகம் செய்துதான் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். பாமகவின் தயவால் 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். 
 
கடந்த தேர்தலில் கொடுக்கும் தொகுதியை ஏற்றுக்கொண்டால் 10.5% இடஒதுக்கீடு கொடுப்பதாக கூறினர். எங்களுக்கு தொகுதிகளே வேண்டாம், இடஒதுக்கீடு கொடுங்கள். வெற்றுப் பத்திரத்தில் கூட கையெழுத்து போட்டு தருகிறோம் என ராமதாஸ் கூறினார்’ என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments