Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குற்றங்கள் இல்லாத தமிழகம் உருவாக இது ஒன்றுதான் வழி: அன்புமணி ராமதாஸ்!

Anbumani
, செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (19:02 IST)
குற்றங்கள் இல்லாத தமிழகம் உருவாக இது ஒன்றுதான் வழி என பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும்.
 
அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது. மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடியக் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது
 
குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழகத்தை உருவாக்க  மதுவிலக்கு தான் ஒரே வழி ஆகும். அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடுகள் வளர்க்க லைசென்ஸ் கட்டாயம்: அதிரடி அறிவிப்பு!