Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’அதிகார துஷ்பிரயோகம்’ : இறகுப்பந்து கழக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்

’அதிகார துஷ்பிரயோகம்’ : இறகுப்பந்து கழக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்
, புதன், 3 ஆகஸ்ட் 2016 (00:45 IST)
சங்க விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதால் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கியதாக தமிழ்நாடு இறகு பந்துகழக பொருளாளர் ராஜ் குமார் தெரிவித்தார்.
 

 
இதுதொடர்பாக சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ”அன்புமணியால் சங்கத்திற்குள் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. செயற்குழு கூட்டத்தின் போது துப்பாக்கி ஏந்திய நபருடன் வந்து பேசினார்.
 
தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக நிர்வாகிகள் சிலரை நீக்கினார். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போயுள்ளன. பல விசயங்களில் சங்க விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டார். அவர் தலைவராக நீடித்தால் சங்கத்திற்குள் வெளிப்படைத்தன்மை இருக்காது என சங்க நிர்வாகிகள் புகார் கூறினர்.
 
இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகளின் அதிகாரங்களை பயன்படுத்தி அவர் நீக்கப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலி என்கவுண்ட்டர் வழக்கு - அமித் ஷா விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி