Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கூட்டணி வச்சதுனாலதான் கெஞ்சிக்கிட்டு இருக்கோம்”.. கதறும் அன்புமணி

Arun Prasath
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:48 IST)
கொள்கைளை மாற்றி கூட்டணிக்கு சென்றதால், தற்போது சீட்டிற்காக கெஞ்ச வைப்பது வருத்தமளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிட்டதில் அக்கூட்டணி பெரும் தோல்வியை கண்டது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் அக்கூட்டத்தில் பேசிய அன்புமனி ராமதாஸ், ”உள்ளாட்சி தேர்தலில் அரை சீட், கால் சீட், என கெஞ்ச வைப்பது வருத்தமளிக்கிறது.

கூட்டணி வைத்ததற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை” என கூறினார்.
மேலும், “கூட்டணியே வேண்டாம் என்ற கொள்கையை மாற்றி கூட்டணிக்கு சென்றோம், ஆனால் இப்போது கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். அந்தந்த மாவட்ட அதிமுக தலைவர்களிடம் சீட் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments