Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கண்ணனை கைது செய்யவில்லை என்றால்..? ஹெச்.ராஜா எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:36 IST)
இன்று இரவுக்குள் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாளை மாலை 3 மணிக்கு மெரினாவில் போராட்டம் நடத்தப்படும் என்றும், போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும்,  தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல காவல்துறை அலுவலகங்களில் புகார்கள் செய்யப்பட்டன
 
தமிழக பாஜக சார்பில் இதுகுறித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடமும் புகார் செய்யபப்ட்டது. இந்த நிலையில் நெல்லை கண்ணன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments