Publish Date: Mon, 30 Oct 2017 (17:11 IST)
Updated Date: Mon, 30 Oct 2017 (17:19 IST)
கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாதவர் தமிழக முதல்வராக ஆட்சி புரிகிறார் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர் அரியலூரில் சிமெண்ட் ஆலைகள் இருந்தாலும் வேலைவாய்ப்பு இல்லை, விபத்துதான் அதிகம் நடக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார். குடியரசு தலைவர், பிரதமருக்கு வழங்கப்படும் இசட் பாதுகாப்பை முதல்வர் கேட்பது வேடிக்கையாக உள்ளது.
கவுன்சிலராக இருப்பதற்கு கூட தகுதியில்லாதவராக ஒருவர் ஆட்சி செய்து வருகிறார் என அவர் கிண்டலாக தெரிவித்தார்.