Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரிடம் பொய் சொல்லி தப்பித்துக் கொள்வேன்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:21 IST)
மயிலாடுதுறையில் நடந்த ஒரு திருமண மண்டப திறப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுநிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகமாக கூடுவது தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் திருமண மண்டப திறப்பு விழா ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் அதிக அளவு கூட்டம் கூடி இருந்தது.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ‘நிகழ்ச்சியில் இவ்வளவு கூட்டம் கூடியது குறித்து கண்டிப்பாக முதல்வர் என்னிடம் கேள்வி கேட்பார். தடுப்பூசி செலுத்துக்கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் பின் தங்கி உள்ளதால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் எனக் கூறி தப்பித்துக் கொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்