Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் அடிபட்டு சிதைந்து போன வாலிபர்.. சென்னை அருகே நடந்த கொடூரம்

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (16:58 IST)
அரக்கோணம் அருகே ரயிலில் அடிபட்டு சிதைந்து போன நிலையில் வாலிபர் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த செஞ்சி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில், 35 வயது மதிக்கத்தாக ஆணின் சடலம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் இருவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர் யார்? தற்கொலை செய்து கொள்ள எண்ணி தண்டவாளத்தில் விழுந்தாரா? அல்லது ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என போலீஸார் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments