Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஓர் விசாரணைக் கைதி மரணம்: சென்னையில் பரபரப்பு!

மேலும் ஓர் விசாரணைக் கைதி மரணம்: சென்னையில் பரபரப்பு!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (19:11 IST)
சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் சிறையில் மரணமடைந்த பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. அதற்குள் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட வாலிபர் ஒருவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபரை கண்ணகி நகர் காவல் நிலைய போலீசார் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால் அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்ததாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து மரணமடைந்த கார்த்திக்கின் உறவினர்கள் கண்ணகி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரை காவல்துறையினர் அடித்துக்கொன்றுவிட்டதாக அவர்கள் வாக்குவாதம் செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த மரணம் குறித்தும் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments