Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை; பெற்றோர் எடுத்த விபரீத முடிவு

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2018 (13:04 IST)
சென்னை ஐய்யப்பன்தாங்கலில் வயதான தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
சென்னை போரூரையடுத்த ஐய்யபந்தாங்கலில் வசித்து வந்தவர் மனோகரன். இவரது மனைவி ஜீவா. இவர்களின் பிள்ளைகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் தங்களின் பிள்ளைகளுக்கு  பாரமாக இருக்க விரும்பவில்லை என கடிதம் எழுதிவைத்துவிட்டு, தங்களின் இறுதிச் சடங்கிற்காக 2 லட்சம் ரூபாயையும் வைத்துவிட்டு, தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
பெற்றோர்கள் ஒருபோதும் தங்களின் குழந்தைகளை பாரமாக கருதுவதில்லை. அவர்களை பெரும்பாடு பட்டு படிக்க வைத்து, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து திருமணம் செய்து வைக்கின்றனர். இதனை சற்றும் புரிந்து கொள்ளாத சிலர் தங்களின் பெற்றோரை பாரமாக கருதுகின்றனர். இதனால் விரக்தியின் எல்லைக்கு தள்ளப்படும் பெற்றோர்கள் இதுபோன்ற முடிவுக்கு தள்ளப்படுகிறர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments