அதிக விலைக்கு பால் கொள்முதல் என்ற தகவல் பொய்யானது: அமுல் விளக்கம்..!

Webdunia
வியாழன், 25 மே 2023 (16:38 IST)
ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். 
 
மேலும் இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் அமுல் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளது. 
 
அந்த விளக்கத்தில் ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என்று தெரிவித்துள்ளது. 
 
ஆவின் நிறுவனம் என்ன விலையை பாலுக்கு நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கு தான் நாங்களும் கொள்முதல் செய்கிறோம் என்றும் விவசாயிகள் பாதிப்பை தடுக்கவே அமுல் செயல்படும் என்றும் ஆவின் நிறுவனத்துக்கு எதிராக எப்போதும் செயல்படாது என்றும் அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments