Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுக தேர்தல் அறிக்கை :வெளீயீடு! வீட்டில் ஒருவருக்கு அரசுவேலை -

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (21:48 IST)
அமமுக கட்சியில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின்  பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என  சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமமுகவுடன் சில முக்கிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.  அவர்  கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார். இத்தொகுதியில் ஐம்முனைப் போட்டி நிலவுகிறது.

தினகரன் தலைமையிலான அமமுக கட்சியில் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 195 தொகுதிகளில் அமமுக போட்டியிடவுள்ளது. இதனால் தேமுதிகவின் நிலைமை பரிதாபத்தில் உள்ளது.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் இனிமேல் மதுபான ஆலைக்கு அனுமதி கிடையாது எனவும், தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு அரசுவேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments