Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நஷ்டத்தில் காலத்தை ஓட்டும் அம்மா உணவகம்: கண்டுகொள்ளுமா ஈபிஎஸ் அரசு?

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (11:43 IST)
ரூ.4 கோடி வருவாய் குறைந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது அம்மா உணவகம். 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு ஏழை எளியோர் மலிவு விலையில் சாப்பிட அம்மா உணவகங்களை தொடங்கினார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதில் இட்லி ஒன்று ஒரு ரூபாய், சாம்பார் சாதம் ஒன்று ஐந்து ரூபாய், தயிர் சாதம் ஒன்று மூன்று ரூபாய், இரண்டு சப்பாத்தி மூன்று ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்நிலையில், சென்னையில் இயங்கிவரும் அம்மா உணவகங்கள் ரூ.4 கோடி வரை வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017- 2018 ஆம் ஆண்டில் அம்மா உணவகங்களில் விற்பனை மூலம் மாநகராட்சிக்கு 28 கோடியே 29 லட்சம் வருவாய் கிடைத்தது. ஆனால் 2018 -19 ஆம் ஆண்டில் இந்த வருவாய் ரூ.4 கோடி குறைந்து 24 கோடியே 87 லட்சமாக ஆனது.
 
மாநகராட்சி சார்பில் 207 அம்மா உணவகங்கள் இயங்கி வரும் நிலையில், சில மாதங்களாக உணவகங்கள் முறையாக செயல்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், முன்னர் போல இல்லாமல் அம்மா உணவகங்களில் சாப்பிடும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது எனவும் தெரிகிறது. 
 
எனவே, நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை மேம்படுத்த அரசு சார்பில் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments