Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 தொகுதிகள் கேட்ட அமித்ஷா, ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி: பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (15:24 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 13 தொகுதிகளை பாஜக கேட்டதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 13 தொகுதிகள் வேண்டும் என அமித்ஷா கேட்டதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கு தொகுதியை பாஜக கேட்டு பெற்றுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு மூன்று சதவீத வாக்குகள் மட்டுமே இருக்கிறது என்று கூறப்படும் நிலையில் 13 தொகுதிகளை அதிமுக கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments