Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதை ஆசாமிகளை டார்கெட் செய்யும்; நாய் பிரியாணி

போதை ஆசாமிகளை டார்கெட் செய்யும்; நாய் பிரியாணி
, செவ்வாய், 5 டிசம்பர் 2017 (13:00 IST)
பிரியாணி என்றாலே தமிழ்நாட்டில் பெயர்போன இடம் ஆம்பூர். இந்நிலையில் ஆம்பூரில் உள்ள சில கடைகளில் பிரியாணி என்ற பெயரில் `நாய் பிரியாணி'யை  விலைகுறைவாக விற்பனை செய்து வருவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆம்பூரில் அசைவம் சார்ந்த சிறிய, பெரிய ஓட்டல்கள் பெருமளவில் இருக்கின்றன. மாலை நேரங்களில் தள்ளுவண்டி கடைக்களில் 60, 70 ரூபாய்க்கே மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையாகும். இவ்வளவு  மலிவாக மட்டன் பிரியாணி தரமுடியாது என்று விசாரித்தபோது தான்  கசாப்புக் கடைக்காரர்களோடு சேர்ந்துகொண்டு மட்டனில் நாய்க் கறியைக் கலந்து கொடுக்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்துள்ளது. 
 
வித்தியாசம் தெரியாமல் இருக்க நாய் கறியோடு அஜினோமோட்டோவையும் புதினா எசென்ஸையும் கலந்து விடுகின்றனர். மேலும் இது போன்ற கடைகளுக்கு சாப்பிட வருபர்வர்கள் பெரும்பாலானோர் போதை ஆசாமிகளே என்பதால் கடைக்காரர்களுக்கு ரொம்பவும் வசதியாகப்போய்விட்டது. இதனால் உள்ளூர்வாசிகள் பெரிதும் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம்...