நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: காவல் நிலையத்தில் பகீர் புகார்!

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (19:57 IST)
பிரபல தமிழ் முன்னணி நடிகை அமலாபாலுக்கு டான்ஸ் மாஸ்டர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரே புகார் கூறியுள்ள சம்பவம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
நடிகை அமலாபால் பிரபல இயக்குனர் ஏல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த அமலாபால் கருத்துவேறுபாடு காரணமாக தனது காதல் கணவர் இயக்குனர் ஏஎல் விஜயை விவாகரத்து செய்தார்.
 
விவாகரத்துக்கு பின்னர் தனியாக வசித்து வரும் அமலாபால் மீண்டும் படங்களில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அவர் சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நடனப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளார்.
 
அந்த புகாரில், நடன வகுப்பின் போது டான்ஸ் மாஸ்டர் தன்னிடம் ஆபாசமாக பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார் அமலாபால். பிரபல நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்