புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

Senthil Velan
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (16:31 IST)
அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 4 புதிய அமைச்சர்களுக்கான  இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோதங்கராஜ், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.
 
செந்தில்பாலாஜி, ஆர்.ராஜேந்திரன், கோவி.செழியன், ஆவடி நாசர் ஆகியோர் அமைச்சர்களாக இன்று பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி ஆர்.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதோடு கூடுதலாக ஆயத்தீர்வைத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  


ALSO READ: புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!
 
கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!

ஒரே இரவில் இந்திய இளைஞர் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.. ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த ஜாக்பாட்..!

பவர் பாலிடிக்ஸ்! வெடிக்கும் கோஷ்டி மோதல்... கிருஷ்ணகிரி உபிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் அமைச்சர் சக்கரபாணி!

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments