Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுடன் கூட்டணியா? கோவை பொதுக்கூட்டம்! - சீமான் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 16 மே 2025 (12:48 IST)

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோவையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் அதில் சீமான் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. ஆங்காங்கே கட்சி பொதுக்கூட்டங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை என பரபரப்பு கூடியுள்ளது. தேர்தல் கூட்டணியில் முதலாவதாக பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. திமுகவை வீழ்த்த சக்தி வாய்ந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்க பாஜக ஆர்வம் காட்டி வருகிறது.

 

இந்நிலையில் இந்த கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை சீமான் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை. பொதுவாக தனித்து போட்டியிடும் நாதக இந்த தேர்தலையும் அவ்வாறே சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் நாளை மறுநாள் கோவையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? என்பது குறித்தும், தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments