Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரம் கிடைக்கும் வரை கூட்டணிதான் பாதுகாப்பு! - திருமாவளவன்!

Prasanth Karthick
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (08:46 IST)

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து கூட்டணியில் பயணிப்பதற்கான காரணம் குறித்து தனது கட்சியினரிடையே பேசியுள்ளார்.

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலம் தழுவிய மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்தது முதலே விசிக - திமுக கூட்டணி குறித்த பல யூகங்கள் வெளியாகி வருகின்றன. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் திருமாவளவன் கூறிய நிலையில், திமுகவும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

 

அதேசமயம் கூட்டணியாக இயங்குவது, தனித்து இயங்குவது குறித்து விசிக கட்சிக்குள்ளேயே பல மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அசோக் நகரில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
 

ALSO READ: சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி: பருவத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?
 

அப்போது பேசிய அவர் “ஆதவ் அர்ஜுனாவும், கட்சி பொதுச்செயலாளர்களும் இருவருமே கட்சியின் நலன் சார்ந்துதான் சிந்தித்தார்கள். எதிர்காலமும், அதிகாரமும் நம்மை நோக்கி வரும். அப்படி வரும் வரை கூட்டணியில் பயணிப்பதே கட்சிக்கு பாதுகாப்பு. Safer Zone இல்லாமல் விளையாடவே கூடாது. நாம் யுத்தத்தில் இருக்கிறோம். எலிக்கூட தப்பிக்க தன் வலையில் தனி ஒரு பாதை வைத்திருக்கும். எலிக்கு இருக்கும் அறிவு நமக்கு வேண்டும். 

 

மக்களோடு நிற்பவர்களை யாரும் நசுக்கிவிடவோ, ஒழித்துவிடவோ முடியாது என்பதற்கு இலங்கை தேர்தல் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5,500 கிலோ கலப்பட நெய் தயாரித்த கம்பேனி! மொத்தமாக சீல் வைத்த அதிகாரிகள்!

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி: பருவத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?

வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்வாரியம் விளக்கம்..!

திருப்பதி மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments