Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

Siva
சனி, 22 மார்ச் 2025 (08:03 IST)
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படும் என சென்னை மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி வெளியிட்ட செய்திக் குழுமத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகள், அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும், ஆதிதிராவிட, சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், சனிக்கிழமை ஆன இன்று பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை பாடத்திட்ட அட்டவணையை பின்பற்றி வகுப்புகளை நடத்துமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments