Webdunia - Bharat's app for daily news and videos

Install App

+2 மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (21:06 IST)
தமிழகத்தில் உள்ள +2 மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் தொடங்க ஏற்பாடு செய்யுமாறு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் +2  மாணவர்களுக்கு மின்னஞ்சல் தொடங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
ஜூலை 30-ஆம் தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவ அறிவுறுத்தப்பட்டுள்ளது. +2  மாணவர்களுக்கு ரிசல்ட் உள்பட பல்வேறு தகவல்கள் இனி மின்னஞ்சல் மூலம் அனுப்ப வாய்ப்பு இருப்பதால் அனைவருக்கும் மின்னஞ்சல் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து நாளை முதல் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல் தொடங்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments