Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை அனைத்துக் கட்சி கூட்டம் - என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:17 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிப்பு. 

 
நீட் தேர்வு விலக்கு வேண்டும் என கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து அதனை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும். ஆனால் சில மாதங்களாக நீட் தேர்வு மசோதா ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் இருந்தது. 
 
இந்நிலையில் தற்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.  நாளை நடைபெற உள்ள உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரை சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments