Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று அனைத்து கட்சி கூட்டம்..! தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

Senthil Velan
சனி, 23 மார்ச் 2024 (10:07 IST)
மக்களவை தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் சென்னையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளது.
 
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, தமிழக தலைமை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. பறக்கும்படை மூலம் தமிழகம் முழுவதும் வாகனச் சோதனை நடைபெறுகிறது. தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து முயற்சிகளும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
 
இந்நிலையில் மக்களவை தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் சென்னையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளது. இதில் பங்கேற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், மக்களவைத் தேர்தல் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.

தேர்தலை நியாயமாகவும் அமைதியான முறையில் நடத்துவது, பணப்பட்டுவாடாவை தடுப்பது  உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து அரசியல்  பிரதிநிதிகள் கூட்டத்தில் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments