Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் இரவு 8 மணி வரை இயங்கும் : அதிகாரிகள் தகவல்

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (11:40 IST)
அகில இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு வரும் சனிக்கிழமை இரவு 8 மணி வரை  அனைத்து வங்கிகளும்  இயங்கும் என தெரிவித்துள்ளது.
 
மார்ச் 29 மஹாவீர் ஜெயந்தி மற்றும் மார்ச் 30-ம் தேதி புனித வௌ்ளி ஆகியவைகளை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை. ஏப்.1-ம் தேதி ஞாயிறு என்பதால் விடுமுறை. ஏப்ரல் 2ஆம்தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால் வங்கிகள் செயல்பட்டாலும் அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது. 
 
எனவே இடையில் மார்ச் 31ஆம் தேதி சனிக்கிழமையும் விடுமுறை என வதந்திகள் பரவின. இதனால் மொத்தம் 5 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என கூறப்பட்டு வந்தது.
 
இது தொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தலைவர் வெளியிட்ட தகவலில்,
 
வரும் வியாழக்கிழமை (29) மற்றும் வெள்ளிக்கிழமை (30) மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை, சனிக்கிழமை (31) அனைத்து வங்கிகளும் இரவு 8 மணி வரை செயல்படும். அதேபோல் ஏப்ரல் 2-ஆம் தேதியும் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments