Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணே, அழகிரி அண்ணே!! எல்லாம் பேச்சே... தொண்டர்களால் கடுப்பில் தலைமை!!

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (14:19 IST)
திமுக-வை விமர்சித்து அழகிரி ஆதரவாளர்கள் சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
முக அழகிரி திமுகவில் தென் மண்டல் அமைப்பு செயலாளராக் செல்வாக்காக இருந்தவர். இப்படி இருந்தவரை திடீரென கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார். இதன் பின்னர் திமுகவில் இருந்து விலகியே இருந்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுகவில் இணை விருப்பம் தெரிவித்தார். 
 
திமுக தலைவர் ஸ்டாலின், தன்னை கட்சிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், ஸ்டாலின் இவை எதையுமே கண்டுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் அழகிரி தனிக்கட்சி துவங்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. 
தனக்கென தனி ஆதரவாளர்கள் சிலர் இருந்தாலும் அமைதி காத்து வருகிறார் அழகிரி. இந்நிலையில், அழகிரி ஆதரவாளர்கள் சிலர், திமுகவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அந்த போஸ்டரில், அண்ணே அண்ணே அழகிரி அண்ணே நம்ம கட்சி நல்ல கட்சி, மதுரையில இப்போ ரொம்ப கெட்டுப் போச்சுன்னே என தங்களது ஆதங்கத்தை வெளியிப்படுத்தியுள்ளனர். ஆனால், இது திமுக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments