Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நபராக வந்து வாக்களித்த அஜித்.. 30 நிமிடங்கள் காத்திருந்து ஜனநாயக கடமை..!

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:27 IST)
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் முதல் நபராக நடிகர் அஜித் வந்து முப்பது நிமிடங்கள் காத்திருந்து தனது வாக்கு செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏழு கட்டங்களாக இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் முதல் கட்ட தேர்தல் இன்று 102 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது என்பதும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் முன் 30 நிமிடங்கள் முன்கூட்டியே வந்து வரிசையில் 30 நிமிடங்கள் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் வாக்களித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments