Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’ஆடி கார்’ ஐஸ்வர்யா ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

’ஆடி கார்’ ஐஸ்வர்யா ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
, செவ்வாய், 19 ஜூலை 2016 (23:53 IST)
மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனு 2ஆவது முறையாகத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
சென்னை தரமணியில் கடந்த 1ம் தேதி மதுபோதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யா, தொழிலாளி ஒருவர் மீது ஏற்றி விபத்துக்கு உள்ளாக்கினார். இந்த விபத்தில் முனுசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது தொடர்பாக ஐஸ்வர்யா ஜாமீன் மனு ஒன்றைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
இதையடுத்து கடந்த 15ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக ஜாமீன் கோரி ஐஸ்வர்யா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு வழக்கை விசாரித்த நீதிபதி ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எச்சரிக்கை! - பருப்புகள் விலை ரூ.300 ஐ தாண்டும் அபாயம்