Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிப்பு.. பயனர்கள் அதிருப்தி..!

Siva
புதன், 14 மே 2025 (07:41 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக பயனர்கள் புகார் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பயனர்கள் அதிருப்தியுடன் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் சேவை இயல்பாக நடந்து வருவதாகவும், ஏர்டெல் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
ஏர்டெல் சேவை பாதிப்பு குறித்து சென்னை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சமூக வலைதளங்களில் பயனர்கள் பதிவு செய்து வருகின்றனர். தங்கள் செல்போன் மூலம் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், இன்டர்நெட் பயன்பாட்டை பயன்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு தொடர்பாக, ஏர்டெல் இணையதளத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா சட்டக்கல்லூரி பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி..!

ஒடிசா ரத யாத்திரை நெரிசலில் சிக்கி மூவர் பலி; ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் விபரீதம்..!

தமிழ்நாடு அரசின் மகளிா் உரிமைத் தொகை .. 3 விதிமுறைகள் தளர்வு... பெண்கள் மகிழ்ச்சி..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியின் மெடிக்கல் ரிப்போர்ட்.. மார்பில் காயம் என அதிர்ச்சி தகவல்..!

8 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments