Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயன் பட பாணியில் ஹெராயின் கடத்திய நபர்! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (16:55 IST)
சென்னை விமான நிலையத்தில் மாத்திரை வடிவில் ஹெராயின் கடத்தி வந்தவர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் பல பன்னாட்டு விமானங்கள் வந்து செல்லும் நிலையில் தங்கம், போதைபொருள் போன்றவற்றை கடத்தி வரும் சிலர் பிடிபடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணித்த ஒரு பயணியை சோதித்தபோது அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் ஹெராயின் விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை அழைத்து சென்று தகுந்த சிகிச்சை அளித்து ஹெராயினை வெளியே எடுத்துள்ளனர். அவரிடம் கைப்பற்றப்பட்ட 1.26 கிலோ ஹெராயினின் மதிப்பு ரூ.8.86 கோடி என கூறப்பட்டுள்ளது. தான்சானியாவை சேர்ந்த அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments