Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் ''- நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

'அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் ''-  நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்
, புதன், 22 மார்ச் 2023 (15:36 IST)
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிவகித்து வருகிறார்.

இந்த நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும்  26 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சித்தலைமை அறிவித்தது.

அதன்படி, வேட்புமனுதாக்கல்,  கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் வரை வேட்புமனுதாக்கல்  நடைபெற்றது.

இந்த வேட்மனுவை மார்ச் 21 ஆம் தேதி பிற்பலம் 3 மணிக்கும் திரும்பப் பெறலாம் என்று கூறி, மார்ச் 26 ஆம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் நிலையில், மார்ச் 27 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் , எடப்பாடிக்கு ஆதரவாக 200 க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், ஓ.பிஎஸ் தரப்பினர்.  ‘பொதுக்குழு மூலம் பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளார், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், விளக்கம் கேட்காமல்  தங்களை கட்சியில் இருந்து நீக்கினர். கட்சியில் இருந்து  நீக்குவதற்கு எங்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பவில்லை. விளக்கம் தர அவகாசமும் அளிக்கவில்லை ‘என்று ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘அதிமுக தேர்தலுக்கான அவகாசம் முடிந்துள்ள நிலையில்,  தேர்தல் நடைமுறை தொடங்கிய பின் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் வழக்கு இன்னும் நிலுவையிலுள்ள போதுதான் தேர்தலை அறிவித்துள்ளனர். அதனால், தாமதமாகவில்லை.

பொதுச்செயலாளார் தேர்தலில்  போட்டியிடுவதற்காக நிபந்தைகளை  நீக்கினால் வழக்கை திரும்ப பெறத் தயார் என்றும், பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று தெரிவித்துள்ளனர்.’

இந்த வழக்கு மீண்டும் நாளையும் விசாரணைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட வேண்டும் - டிடிவி.தினகரன்