Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - 150 பேர் மீது வழக்கு!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (14:59 IST)
நெல்லை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய நீட் தேர்வு ரத்து என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தில் 13 இடங்களிலும், மாநகர் பகுதியில் 40 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, மாநகரில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதேபோல் புறநகர் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments