Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

Mahendran
செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (10:21 IST)
நேற்று அந்த தியாகி யார் என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்த நிலையில், இன்று கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த தியாகி யார் என்ற வாசகம் அடங்கிய பேட்ஜை நேற்று அணிந்த அதிமுக உறுப்பினர்கள், அவையில் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், இன்று சட்டசபை தொடங்கிய போது அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.
 
சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இன்றும் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடுவார்களா? சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அதிரடி நடவடிக்கை எடுத்து, இன்றும் அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
ஆனால், நேற்று போலவே இன்றும் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் மட்டும் இயல்பாக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments